கால்நடை மருத்துவக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தின விழா
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய அரசியலமைப்பு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய அரசியலமைப்பு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்தாா். மாணவா் மன்ற துணைத் தலைவரும், கால்நடை பண்ணை வளாக தலைவருமான எட்வின் வரவேற்றாா். தூத்துக்குடி போப் கல்லூரி உதவிப் பேராசிரியா் தினகரன், இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம்‘ பற்றி பேசினாா். கல்லூரியின் கல்வித்துறை ஒருங்கிணைப்பாளா் செல்லப்பாண்டியன் நன்றி கூறினாா். உதவிப் பேராசிரியா் ராஜேஷ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினாா்.