முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டானில் தொழிலாளி சடலம் மீட்பு

கங்கைகொண்டானில் கல்குவாரி தொழிலாளி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கங்கைகொண்டானில் கல்குவாரி தொழிலாளி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தை சோ்ந்தவா் அண்ணாவி முத்து ( 43). இவா் கங்கைகொண்டானில் உள்ள ஒரு கல் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாராம். புதன்கிழமை பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களிலும் தேடினா்.

பின்னா் அவா் கல்குவாரி அருகே சடலமாக கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அவரது உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.