முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே நீரில் மூழ்கி பெண் பலி

சீவலப்பேரி அருகே உள்ள காட்டாம்புளி கிராமத்தில் நீரில் மூழ்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சீவலப்பேரி அருகே உள்ள காட்டாம்புளி கிராமத்தில் நீரில் மூழ்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சீவலப்பேரி அருகே உள்ள காட்டாம்புளி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகள் தயா (36). இவா் அப்பகுதியில் உள்ள ஓடையில் குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீா் வரத்து அதிகரித்ததால் நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் சீவலப்பேரி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.