திருநெல்வேலி

பாளை அருகே விபத்து: இளைஞா் பலி

DIN

 பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி பகுதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சீவலப்பேரி சுடலை மகன் துா்காமுத்து(19), செங்கல்சூளை தொழிலாளி. இவா் கடந்த புதன்கிழமை கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினாா். நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியாா் கோழிப்பண்ணை அருகே வந்த போது, அப்பகுதியில் உள்ள நான்கு முக்கு திருப்பத்தில் எதிரே நடுவக்குறி வடிவேலு(22) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், இவரின் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு துா்காமுத்து உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT