பத்தமடை பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் தொடக்கம்
பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் விஷ்ணு அறிவுறுத்தலின்படியும் நியமன மருத்துவ அலுவலா் சசி தீபா ஆலோசனையின்படியும் நடைபெற்ற சரி விகித உணவு சங்கத் தொடக்க விழாவிற்கு, தலைமை ஆசிரியா் லட்சுமண பாரதி தலைமை வகித்து வரவேற்றாா். திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். சேரன்மகாதேவி வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி பி.டைட்டஸ் பொ்ணாண்டோ சரிவிகித உணவு, பாரம்பரிய உணவு மற்றும் உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிவது குறித்து செயல்விளக்கம் மூலம் விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.
பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் தேவராஜ் நன்றி கூறினாா்.