மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழு கூட்டம்
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் மாதவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் மாதவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் பாரதிகண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை முருகன், மாவட்டக்குழு உறுப்பினா் ராஜாதலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் நாராயணபுரம், கோ. மருதப்பபுரம், மேலநீலிதநல்லூா் ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும், தோணுகால் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேதமடைந்த சமையல் கூடத்தை அப்புறப்படுத்தவேண்டும், ஒன்றியத்தில் உள்ள 69 பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணியை புதுப்பிக்க ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து வழங்கியதை அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன.
Advertisement