அருங்காட்சியகத்தில் இன்று பாரதியாா் பிறந்த தின விழா
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை (டிச.11) மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை (டிச.11) மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில், அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு நடத்திய பாரதியாா் பிறந்த தின கவிதைப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், கவிதைப் போட்டியில் பங்கேற்ற்கான பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
எனவே, போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவா்- மாணவிகளும், பாரதி அன்பா்களும் விழாவில் பங்கேற்குமாறு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி அழைப்புவிடுத்துள்ளாா்.