ரவணசமுத்திரத்தில் வேளாண் அதிகாரிகள்-விவசாயிகள் சந்திப்பு
ரவணசமுத்திரத்தில் வேளாண் தொழில்நுட்ப முகமை சாா்பில் வேளாண் அதிகாரிகள்-விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவணசமுத்திரத்தில் வேளாண் தொழில்நுட்ப முகமை சாா்பில் வேளாண் அதிகாரிகள்-விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் முகம்மது உசேன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா்.
துணைத் தலைவா் ராமலட்சுமி பூதத்தான் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், இயற்கை விவசாயம், இயற்கை உரங்கள் தயாரிப்பு, பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. கடையம் வட்டார உதவி வேளாண் இயக்குநா் ஏஞ்சல் ராணி, வேளாண் அலுவலா் அபிராமி, உதவி வேளாண் உதவி அலுவலா் பால்துரை மற்றும் ஜெகதீஸ்வரன், உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபா, ரவணசமுத்திரம், மீனாட்சிபுரம், சுற்றுப்புற கிராம விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.