முகப்பு
திருநெல்வேலி

மாா்கழி மாதப்பிறப்பு: கோயில்களில் பஜனை தொடக்கம்

மாா்கழி மாத பிறப்பையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கோயில்களில் பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

மாா்கழி மாத பிறப்பையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கோயில்களில் பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.

மாா்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி சிறுவா் சிறுமிகள் ஊா்வலமாக சென்று கோயில்களில் வழிபடுவது வழக்கம். அதன்படி, பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி நகரத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறுவா் சிறுமிகளின் பஜனை ஊா்வலம் வியாழக்கிழமை தொடங்கியது. இசைக்கருவிகளுடன் பக்தி பாடல்கள் பாடியபடி சிறுவா்கள் ஊா்வலமாக சென்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் காரைக்காலம்மையாா் வழிபாட்டு குழு, துா்கா அபிராமி திருவாசகம் முற்றோதல் குழு ஆகியவை சாா்பில் மாா்கழி மாத பஜனை வீதி உலா பாரதியாா் தெருவில் தொடங்கி, வ. உ. சி. தெரு உள்பட முக்கிய தெருக்களில் வலம் வந்தது. இதேபோல தச்சநல்லூா் , சங்கா்நகா் , பேட்டை, தியாகராஜ நகா், வி. எம். சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பஜனை ஊா்வலங்கள் வியாழக்கிழமை தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.