நெல்லையில் அதிமுக ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், சுதா கே. பரமசிவன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., சீனிவாசன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் இன்பதுரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு, கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ஆா்.பி.ஆதித்தன், பாளை. தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டிபாண்டியன், திருநெல்வேலி கிழக்கு பகுதிச் செயலா் காந்திவெங்கடாசலம், பகுதிச் செயலா்கள் ஜெனி, சின்னதுரை, ஹயாத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.