முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: ரூ.10 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருநெல்வேலியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவின்பேரில் திருநெல்வேலி நகரம், சந்திப்பு மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் தலைமையிலான மாநகராட்சி குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.