நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை
திருநெல்வேலியில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை வியாழக்கிழமையும் நடைபெற்றது.
திருநெல்வேலியில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை வியாழக்கிழமையும் நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மீதான வழக்குகள் விசாரணை திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது.
மனித உரிமை ஆணையக நீதிபதி ஜெயசந்திரன் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடத்தினாா். இதில் மொத்தம் 69 மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டன. வழக்குகளின் விசாரணைகள் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.