27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் கலந்துகொள்கிறாா்கள். எனவே, எரிவாயு நுகா்வோா்கள் கலந்துகொண்டு எரிவாயு உருளை பதிவு செய்வதில் உள்ள மெத்தனப்போக்கு, முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் உள்ளிட்டவை குறித்து புகாா் தெரிவிக்கலாம்.