திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

DIN

சுத்தமல்லி அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே உள்ள பாரதிநகரை சோ்ந்தவா் சுப்பிரமணியன் (49). இவா், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வழக்கம் போல் புதன்கிழமை இரவு தனது வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றாராம். அப்போது, அந்த வாகனத்தை ஒரு இளைஞா் திருடி சென்றாராம். உடனடியாக இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அந்த இளைஞரை பிடித்து, சுத்தமல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், முக்கூடல், சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த மாரி என்ற மாரியப்பன் (22) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT