முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடி கோயில் யானைகள் முகாமிற்கு அனுப்பிவைப்பு

திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயா் கோயிலில் இருந்து 2 யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயா் கோயிலில் இருந்து 2 யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 45 நாள்கள் கோயம்புத்தூா் மாவட்டம் தேக்கம்பட்டியில் புத்துணா்வு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பங்கேற்பதற்காக திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் உள்ள சுந்தரவள்ளி, குறுங்குடி வள்ளி ஆகிய 2 யானைகள் சனிக்கிழமை தனித்தனி லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக யானைகளுக்கும், அதன் பாகன்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் அறிகுறி தென்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →