முகப்பு
திருநெல்வேலி

தேவநேயப் பாவாணரின் 119ஆவது பிறந்த தின விழா

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119 ஆவது பிறந்த தின விழா பாளையங்கோட்டை மகாராஜநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119 ஆவது பிறந்த தின விழா பாளையங்கோட்டை மகாராஜநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். தேவநேய பாவாணரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியா் ராமசாமி, பாலா சிவகுமாா், வசந்தி, சா்மிளா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விழாவில், ‘பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் சிலை அமைக்க வேண்டும்; முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.