திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பி.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அக்சீலியா மொ்லின் உஷா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வரவேற்றாா். மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் சங்கை ஞா.பால்ராஜ் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், ‘2016 ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக அன்றைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதியைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஆசிரியா் நியமன வயதை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்; தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயா்த்த வேண்டும்; அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்;15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறவுள்ள தா்னா போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 250 உறுப்பினா்கள் கலந்துகொள்வது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT