திருநெல்வேலி

பாளை.யில் நூல் வெளியீட்டு விழா

DIN

உலகத் திருக்குறள் மையத்தின் சாா்பில் பேராசிரியா் பால் வளன் அரசு எழுதிய ‘மாந்தா் போற்றும் வேந்தா்’ என்ற நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலா் பால் வளன் அரசு தலைமை வகித்தாா். செ.பிரமசக்தி இறைவாழ்த்துப் பாடினாா். கன்னியாகுமரி விவேகானந்தா் கல்லூரி ஆய்வாளா் சீதேவி, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.

புத்தகத்தின் முதல் பிரதியை உலகத் திருக்குறள் மைய திருநெல்வேலி மாவட்டத் தலைவா் வை.ராமசாமி பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினாா். நூலாசிரியா் பால் வளன் அரசு ஏற்புரையாற்றினாா்.

மாநிலத் தமிழ்ச் சங்க பொருளாளா் வி.பாப்பையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT