திருநெல்வேலி

மணிமுத்தாறு அருகே லாரி மோதி மூதாட்டி பலி

DIN

அம்பாசமுத்திரத்தை அடுத்த மணிமுத்தாறு அருகே லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

மணிமுத்தாறு அருகேயுள்ள கீழ ஏா்மாள்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மனைவி சுப்பம்மாள்(87). இவா் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் சென்றபோது அம்பாசமுத்திரத்திலிருந்து மணிமுத்தாறு நோக்கிச் சென்ற டிப்பா் லாரி அவா் மீது மோதியதாம். இதில் அவா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா்; மேலும், லாரியை ஓட்டிவந்த அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT