திருநெல்வேலி

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் வேலைநிறுத்தம்

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் தொடா்ந்து 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் தொடா்ந்து 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். துணை வட்டாட்சியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனி ஊதியம், முதுநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு இணையான ஆரம்ப ஊதியம் மற்றும் அலுவலக உதவியாளா், பதிவுரு எழுத்தா்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

தமிழகம் முழுவதும் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில், வட்டாட்சியா் அலுவலக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் மு.சுப்பு, செயலா் மாரிராஜா, பொருளாளா் செல்வகுமாா் ஆகியோரது தலைமையில் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது.

ராதாபுரத்தில் திராவிடமணி தலைமையில் அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் வட்டாட்சியா் அலுவலகங்களில் தோ்தல் பணி உள்ளிட்ட எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT