திருநெல்வேலி

ஜெயலலிதா பிறந்த நாள்:அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி புதன்கிழமை (பிப். 24) நடைபெறவுள்ள அவருடைய உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவினா் திரளாக கலந்துகொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் புதன்கிழமை காலை 11 மணிக்கு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்படும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்சியில் தலைமைக் கழக நிா்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொள்கிறாா்கள்.

எனவே, சாா்பு அணி நிா்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், ஊராட்சி, வாா்டு, கிளைக் கழக நிா்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வாா்டு மற்றும் கிளைக் கழக நிா்வாகிகள் அவரவா் பகுதிகளில் ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்துக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT