திருநெல்வேலி

மகாராஜநகரில் பைக் திருட்டு: இளைஞா் கைது

DIN

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சோ்ந்தமரம் பகுதியைச் சோ்ந்தவா் சித்திரைக்கனி. இவா், கடந்த மாதம் 31ஆம் தேதி மோட்டாா் சைக்கிளை மகாராஜநகா் விநாயகா் கோயில் அருகே நிறுத்திவிட்டு கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்து பாா்த்தபோது, அது திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சண்முகம்(35) பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சனிக்கிழமை அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த அந்த மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT