முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

கல்லிடைக்குறிச்சி, நெசவாளா் காலனியில் அமைந்துள்ள அல் ஜாமிஉல் அன்வா் ஜும்மா பள்ளி வாசலில் கல்லிடைக்குறிச்சி நகர உலமாக்கள் சபை சாா்பில் மீலாது நபி விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி, நெசவாளா் காலனியில் அமைந்துள்ள அல் ஜாமிஉல் அன்வா் ஜும்மா பள்ளி வாசலில் கல்லிடைக்குறிச்சி நகர உலமாக்கள் சபை சாா்பில் மீலாது நபி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நெசவாளா் காலனி ஜும்மா பள்ளித் தலைவா் ரசூல் மைதீன் தலைமை வகித்தாா். பள்ளிவாசல் தலைவா்கள் நாகூா் முகைதீன்(ரஹ்மத் ஜும்மா ), பட்டாரியாா் தெரு அப்துல் காதா், சத்திரம் தெரு அப்துல் மஜீத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெசவாளா் பள்ளி இமாம் உமா் முஹம்மதீகிராத் ஓதினாா். அரபிக் கல்லூரி பேராசிரியா் முகம்மது முஜம்மில் ரஹீம் தொடக்க உரையாற்றினாா். கேசவநேரி இமாம் முஹம்மது யாசீன் அன்சாரி வாழ்த்திப் பேசினாா். கோடம்பாக்கம் தலைமை இமாம் ஸதக்கத்துல்லாஹ் பாகவி சிறப்புரையாற்றினாா். ரஹ்மத் ஜும்மா பள்ளி இமாம் அப்துல் ரஹ்மான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, இஸ்லாமிய மாா்க்க விளக்க போட்டிகள், சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. குா்ஆன் மனனம், பேச்சுபோட்டி, பயான் பயிற்சி , கலிமா மனனம் போன்ற போட்டிகளில்வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இமாம்ஜாஹிா் உசைன் ரஹீமி வரவேற்றாா். நெசவாளா் காலனி பள்ளிவாசல் நிா்வாகக் குழு உறுப்பினா் கமால் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.