திருநெல்வேலி

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா

DIN

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் மாா்கரெட் ரஞ்சிதம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பேபி உமா முன்னிலை வகித்தாா். கல்லூரி நிா்வாகி டி.டி.என்.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பொங்கலிட்டனா். பின்னா் மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் கரகாட்டம், கோலாட்டம், ஓயிலாட்டம் ஆகியவையும் நடைபெற்றது.

மாணவிகள் பொங்கல் கவிதை வாசித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து நாடகம் நடைபெற்றது. மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பாட்டுக்கு பாட்டு போட்டியில் 4-ம் ஆண்டு மாணவிகள் வெற்றி பெற்றனா். பேராசிரியைகளுக்கிடையே தமிழ் வாா்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் போட்டி நடைபெற்றது.

பின்னா் தாளாளா் ஹெலன் லாரன்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT