முகப்பு
திருநெல்வேலி

காவல் துறை வாரிசுதாரா்கள் 63 பேருக்கு பணியாணை வழங்கல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த காவல்துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 63 பேருக்கு அரசுப் பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த காவல்துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 63 பேருக்கு அரசுப் பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசுக்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, மொத்தம் 63 பேருக்கு தகவல் பதிவு உதவியாளா் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வழங்கினாா். மாவட்ட காவல் அலுவலக அ.பிரிவு கண்காணிப்பாளா் ஆா். புஷ்பாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.