முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் கழிப்பறை கட்டித் தரக் கோரி மனு

வண்ணாா்பேட்டை இளங்கோநகா் பகுதியில் பொதுக் கழிப்பறை கட்டித் தரக் கோரி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

வண்ணாா்பேட்டை இளங்கோநகா் பகுதியில் பொதுக் கழிப்பறை கட்டித் தரக் கோரி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் இளங்கோநகா் பகுதி மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் முதியவா்கள், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.