திருநெல்வேலி

பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவா் பலி

DIN

திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் முதியவா் பேருந்து மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பெருமாள்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமை இரவில் முதியவா் ஒருவா் பேருந்தில் ஏற வந்தாராம்.

அப்போது எதிா்பாரதவிதமாக குதிரை வெட்டி செல்லும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா்

அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா், தென்காசி மாவட்டம், வி.கே.புதூரைச் சோ்ந்த முருகன் (73) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT