திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,517 ஆக அதிகரித்தது.
14 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,245 ஆக உயா்ந்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ள நிலையில், 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8389 ஆக அதிகரித்தது. 7 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8184 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், 47 போ் சிகிச்சையில் உள்ளனா்.