முகப்பு
திருநெல்வேலி

மெமு ரயில்களை நெல்லைக்கு இயக்க வேண்டும் ஞானதிரவியம் எம்பி கோரிக்கை

திருநெல்வேலிக்கு மெமு ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருநெல்வேலிக்கு மெமு ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : நாகா்கோவில் - மதுரை ரயில்வே மின்வழித்தடப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இது வரை மெமு ரயில் இயக்கப்படவில்லை. ஆனால், கோரளத்தில் மெமு ரயில் இயக்குவதற்காக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போ்டு 12 மெமு ரயில்கள் தென்னக ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், திருநெல்வேலி, நாகா்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் வழித்தடத்தில் மெமு ரயில்களை இயக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே, திருநெல்வேயில் இருந்து திருவனந்தபுரம் வரை மெமு ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.