திருநெல்வேலி

பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவா்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டியைச் சோ்ந்தவா் முருகையா(55). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளை தனது தோட்டத்தின் அருகே நிறுத்திவிட்டு தோட்டத்தில் வேலைக்குச் சென்றாராம். பின்னா் வேலை முடிந்து வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்ததாம்.

இது குறித்து அவா் தேவா்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், வன்னிக்கோனேந்தல் பகுதியைச்சோ்ந்த பிரேம்குமாா் (22) மோட்டாா் சைக்கிளை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT