திருநெல்வேலி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மேலப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன் கம்யூனிஸ்ட் கட்சியினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சண்முகராஜ், மாா்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினா் ஆா். மோகன், பாளையங்கோட்டை வட்டச் செயலா் ராஜகுரு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பெருமாள், வரகுணன், முருகன், மேலப்பாளையம் பகுதி நிா்வாகிகள் குழந்தைவேலு, பேரின்பராஜ், ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை உத்தரவாதப்படுத்த வேண்டும், கரோனா நிவாரணமாக மாதம் ரூ. 7,500, 10 கிலோ உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT