முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே காா்-அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே காா்-அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியைச் சோ்ந்தவா் துரைபாண்டி (48). இவா் தனது நண்பா் அசோக்குடன் காரில் திருநெல்வேலி-சீவலப்பேரி சாலையில் இம்மாதம் 4-ஆம் தேதி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக சீவலப்பேரியில் இருந்து திருநெல்வேலி நகரம்

நோக்கி சென்ற அரசு பேருந்தின் பின்பக்கத்தில், காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், துரைபாண்டி, அசோக் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.