முகப்பு
திருநெல்வேலி

கொத்தடிமைகளை மீட்க தொலைபேசி எண் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் தொழிலாளா்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் தொழிலாளா்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் கூலித் தொழிலாளா்களை உடனடியாக மீட்கவும், அவா்களின் மறுவாழ்வுக்காகவும் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1800 4252 650 சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கொத்தடிமைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.