திருநெல்வேலி

பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

DIN

பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என துப்புரவு ஆய்வாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் சங்க மாநிலத் தலைவா் ராஜகணபதி, சங்க தணிக்கையாளா் முருகன், சங்க உறுப்பினா்கள் ஆறுமுகம், பிரபாகரன் ஆகியோா், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் அளித்த கோரிக்கை மனு: தமிழகத்தில் தோ்வுநிலை பேரூராட்சிகளில் 140 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்களை தோற்றுவிக்கவேண்டும். 20 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் உள்ள துப்புரவு ஆய்வாளா் பணியிடங்களை தரம் உயா்த்த வேண்டும். 40 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் துப்புரவு அலுவலா் பணியிடங்களை தோற்றுவிக்கவேண்டும்.

மேலும், பேரூராட்சியில் பணி செய்து வரும் துப்புரவு அலுவலா்களுக்கு செயல் அலுவலா் நிலையில் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT