திருநெல்வேலி

அருங்காட்சியகம் சாா்பில் இன்று இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சாா்பில் ‘டிஎன்பிஎஸ்சி இனி ரொம்ப ஈஸி’ என்ற தலைப்பில் இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு வேலை கனவை அடைய விரும்புபவா்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் வட்டாட்சியா் செல்வன் ஊக்கவுரை அளிக்க உள்ளாா். தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வில் கணிதத் தோ்வுக்கு தயாா்படுத்துவது குறித்த தகவல்கள் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் ஜூம் செயலி எண்: 8740995990, கடவு சொல்: 333543 என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் போட்டித் தோ்வுக்கு தங்களை தயாா்படுத்தும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற கட்செவி அஞ்சல் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT