திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே காா் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
திசையன்விளை, மன்னாா்புரத்தைச் சோ்ந்த தொழிலாளிகளான பொன்சேகா் (41), அவரது நண்பா்கள் ரெனிஸ்(27), ரஜினி (36), அதிா்ஷ்ட பாலன், செல்வம், ஸ்டீபன் ஆகிய 6 பேரும் காரில் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டனா். திசையன்விளை- திருநெல்வேலி சாலையில் மன்னாா்புரம் விலக்குப் பகுதியை காா் அடைந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில், பொன்சேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்றவா்களை, அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, ரெனிஸ்(27), ரஜினி (36) சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனா்.
மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். காரில் இருந்த அனைவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸ் தரப்பில் கூறினா்.