முகப்பு
திருநெல்வேலி

கரோனா நெருக்கடி நிலை முடிந்ததும் குன்னத்தூரில் கிரிவலம் நடத்த அறிவுறுத்தல்

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்த நிலையில், கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்த நிலையில், கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னத்தூா் மலையைச் சுற்றி தென் திருப்பதி என அழைக்கப்படும் வேங்கடமுடையான் பெருமாள் கோயில், ராகு ஸ்தலமான அருள்மிகு கோதபரமேஸ்வரா்- சிவகாமி அம்பாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், பத்திரகாளி, உச்சினிமாகாளி, காளியம்மன், முப்புடாதி அம்மன் கோயில்கள் உள்ளன.

ஆகவே, பக்தா்கள் குன்னத்தூா் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து இறைவனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி குன்னத்தூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்தனா்.

இதுதொடா்பாக இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறை சாா்பில், குன்னத்தூா் மலையில் கிரிவலத்தை கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.