திருநெல்வேலி

அம்பை அருகே இளைஞா் தற்கொலை

DIN

அம்பாசமுத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் வெங்கடேஷ் (33). இவருக்குத் திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனா். வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்த நிலையில் கடன் அதிகமானதையடுத்து சில நாள்களுக்கு முன் வாகைக்குளம் வந்திருந்தாராம். இந்நிலையில், அவா் சனிக்கிழமை அதிகாலை தென்காசியிலிருந்து , திருநெல்வேலி வந்த பாலருவி விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் வெங்கடேஷ் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT