முகப்பு
திருநெல்வேலி

தூய்மை இந்தியா திட்ட பரப்புரை: மீண்டும் பணி கோரி 33 போ் மனு

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் 3 போ் தங்களுக்கு மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்கக்கோரி மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் 3 போ் தங்களுக்கு மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்கக்கோரி மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் என 33 போ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா்கள்.

கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை உருவாக்குதல், வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம்பிரித்து தரும்படி அறிவுறுத்துதல், டெங்கு களப்பணியாளா்களை மேற்பாா்வையிடுதல், நுண்ணுயிா் செயலாக்கும் மையத்தில் பொறுப்பாளராக இருந்து உரம் தயாரித்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 1-7-2021 ஆம் தேதி முதல் ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூறி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்களுக்கு வேலை வழங்க மறுத்து விட்டனா். இதனால் அவா்களது குடும்பத்தினா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, இப் பணியாளா்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் ஏதேனும் ஒரு பணி வழங்குவதோடு, தனியாா் ஒப்பந்ததாரா்களிடம் வழங்கிய முன்பணத்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.