திருநெல்வேலி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு பேரவைக் கூட்டம் மகாராஜநகரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினா் பாலசுப்ரமணியன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தொடங்கி வைத்தாா். பொதுச் செயலா் மரிய ஜான் ரோஸ், அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ஜோதி, சிஐடியூ மாவட்டப் பொருளாளா் பெருமாள் ஆகியோா் பேசினா். இதில், புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பெட்ரோல்- டீசல் விலை உயா்வை உடனடியாக குறைப்பதோடு, சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும். வாகனங்களுக்கான காப்பீட்டு கட்டணம், சுங்கச்சாவடி கட்டணத்தையும் குறைக்க வேண்டும். மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.