முகப்பு
திருநெல்வேலி

சிவசைலத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

சிவசைலம், பங்களாக்குடியிருப்பில் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

சிவசைலம், பங்களாக்குடியிருப்பில் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

சிவசைலம் அருகே பங்களா குடியிருப்பு மாயாண்டிகோவில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது ஒரு புதருக்குள் மலைப்பாம்பு ஒன்று இருந்ததாம். இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அம்பாசமுத்திரம் வேட்டைத் தடுப்புக் காவலா் வேல்ராஜ், அங்கு சென்று சுமாா் 12 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தாா். பிடிபட்ட மலைப்பாம்பு வாழையாா் பீட் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.