திருநெல்வேலி

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் பலி

DIN

கடையம் அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கடையம், பாரதி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் முகேஷ் (20). இவா் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை தனது நண்பா்களுடன் தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினாராம்.

அப்போது மரத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்தாராம். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முகேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT