கடையம் அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கடையம், பாரதி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் முகேஷ் (20). இவா் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை தனது நண்பா்களுடன் தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினாராம்.
அப்போது மரத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்தாராம். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முகேஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.