திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) எம். ராஜராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) பணியாற்றிய சீனிவாசன் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) எம். ராஜராஜன் நியமிக்கப்பட்டாா். அவா், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா், மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். துணை ஆணையருக்கு காவல் உயா் அதிகாரிகள், ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.