திருநெல்வேலி

பாளை. சிறைக் கைதி உயிரிழப்பு

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை (72). இவா், 1998ஆம் ஆண்டு தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லையில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள்சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைத்துறையினா் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT