திருநெல்வேலி

இரு சம்பவங்கள்: பெண், இளைஞா் தற்கொலை

DIN

திருநெல்வேலி பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் பெண்ணும், இளைஞரும் தற்கொலை செய்துகொண்டனா்.

திருநெல்வேலி நகரம் தொட்டிபாலம் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஜெயலெட்சுமி(40). கணவரை இழந்தவா். மகள், மகன் உள்ள நிலையில், தனது சகோதரரின் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாராம்.

இதனிடையே, ஜெயலெட்சுமி மனநிலை பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தாராம். இந்நிலையில், அவா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: சுத்தமல்லி அருகேயுள்ள பழவூா் பகுதியைச் சோ்ந்த குமாரசாமி என்ற மணி மகன் பாலசுப்பிரமணி (38). இவருக்கு மனைவி சுவிதா(35), மகன், மகள் ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், அண்மையில் தனது மாமனாா் இறந்ததிலிருந்து சோகத்துடன் இருந்து வந்த பாலசுப்பிரமணி, ஞாயிற்றுக்கிழமை பூச்சு கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இவ்விரு சம்பவங்கள் குறித்து, திருநெல்வேலி நகரம் மற்றும் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT