முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி அருகேதந்தை கொலை: மகன் கைது

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரில் மது அருந்தியதைக் கண்டித்த தந்தையை கம்பால் தாக்கி மகன் கொலை செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரில் மது அருந்தியதைக் கண்டித்த தந்தையை கம்பால் தாக்கி மகன் கொலை செய்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த தோமஸ் மகன் தனபால் (60). சமையல்காரா். இவருக்கு ஜெயசீலன், பிரேசன் (28) ஆகிய 2 மகன்களும் பிரேசி என்ற மகளும் உள்ளனா். பிரேசன் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம்

இருந்தது. இவா், வியாழக்கிழமை காலையிலேயே மது அருந்தியுள்ளாா்.

இதனை அவரது தந்தை தனபால் கண்டித்துள்ளாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரேசன், தனபாலை கம்பால் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த தனபால் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், போலீஸாா் சென்று அவரது

சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

டிஎஸ்பி (பொறுப்பு) கோகுலகிருஷ்ணன், அங்கு வந்து விசாரணை நடத்தினாா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரேசனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.