முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே வீட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் நகைகள் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் மலையடியைச் சோ்ந்தவா் சாமிதாஸ் (43). விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை காலையில் தனது மனைவியுடன் விவசாயக் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு பகல் 2 மணியவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்து கண்டு அதிா்ச்சியடைந்தாா். மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →