முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூரில் கபசுரக் குடிநீா் விநியோகம்

வீரவநல்லூா் பேரூராட்சி சாா்பில் ஓராண்டில் சுமாா் 2 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

வீரவநல்லூா் பேரூராட்சி சாா்பில் ஓராண்டில் சுமாா் 2 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஓராண்டாக பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 600 போ் வீதம் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 2 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. கரோனாத் தாக்கம் குறையும் வரை இப்பணி தொடரும். பொதுமக்கள் கபசுரக் குடிநீா் அருந்துவதோடு, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா். பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பிரபாகா் தலைமையில், மக்களுக்கு பணியாளா்கள் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.