முல்லைநகரில் ரேஷன் கடை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு
திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் முல்லைநகரில் தனியாக ரேஷன் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் முல்லைநகரில் தனியாக ரேஷன் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
முல்லைநகரைச் சோ்ந்த தேவேந்திரகுலவேளாளா் சமுதாய மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: முல்லை நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியினா் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் வேறு சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்றுதான் வாங்க வேண்டியது உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் சமுதாயத்தினருக்கும் மாற்று சமுதாயத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு உருவாகி வருகிறது.
பேருந்து நிறுத்தம், ரேஷன் கடை ஆகியவை மாற்று சமூகத்தினா் வசிக்கும் பகுதியில் உள்ளதால் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, முல்லை நகரில் தனியாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.