திருநெல்வேலி

கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரி மனு

DIN

கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியூ கட்டடத் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், சிஐடியூ கட்டடத் தொழிலாளா் நலச் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு: இம் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளா்கள் வாழ்ந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டடத் தொழிலாளா்களுக்கு போதுமான அளவுக்கு வேலை இல்லை.

எனவே, தமிழக அரசு கட்டடத் தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் கரோனா நிவாரண நிதியாக ரூ.7500 வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான செங்கல், சிமென்ட், இரும்புக் கம்பி, மணல், பெயின்ட் ஆகியவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT